கடவுள் ச(ப)க்தியின் பலனோ! வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுத்திணறி பலி!

1 Min Read

கோவை, மார்ச் 26 திருவண்ணாமலை மாவட்டம் பழையனூரை சேர்ந்தவர் சிவா (40). இவரது மனைவி நித்யா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சிவா கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூருவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் (24.3.2025) நண்பர்களுடன் கோவைக்கு வந்த சிவா, பூண்டி மலை அடிவாரத்தில் இருந்து நேற்று இரவு மூங்கில்குச்சி உதவியுடன் 5.5 கிமீ. நடந்து 7ஆவது மலையை அடைந்தார். சிறிது நேரத்துக்கு பின் மலையைவிட்டு கீழே இறங்கினர். அதிகாலை 3ஆவது மலைக்கு வந்தபோது சிவாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நண்பர்கள் அவருக்கு முதலுதவி சிசிச்சை அளித்தனர். இருந்தாலும் பலனின்றி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். ஏற்ெகனவே இதய கோளாறுக்காக பேஸ்மேக்கர் கருவியை சிவா பொருத்தியுள்ளார். இரவு முதல் விடிய விடிய மலை ஏறி இறங்கியதால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *