மதுரையில் டைடல் பார்க் அமைக்க தடை விதிக்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

மதுரை, மார்ச் 26- மதுரையைச் சேர்ந்த மயில்சாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீர்நிலைகளில் எந்த ஒரு கட்டுமானமும் கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை வண்டியூர் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைக்கும் பணி நடைபெறுகிறது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். எனவே, தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண் டும்’’ என்று கூறியிருந்தார்.
தடை விதிக்க முடியாது

“இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘வண்டியூர் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங் காவிற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறுவது சரி தான். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ள கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை வேறு உத்தரவு போட முடியாது. சம்பந்தப்பட்ட இடத்தை மதுரை மாநகராட்சி கடந்த 1981ஆம் ஆண்டு உரக்கிடங்கு தயாரிப்பதற்கான இடமாக மாற்றி மறு வரையறை செய்துள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இட மாக உள்ளது. எனவே, இந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு தடை விதிக்க முடியாது. மனு தள்ளுபடி செய் யப்படுகிறது’’ என உத்தர விட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *