சமூக வளர்ச்சிக்காக, மாணவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் பெரியார் கலைவிழாவில் திரைப்படக் கலைஞர் ரோகிணி சிறப்புரை

viduthalai
2 Min Read

வல்லம், மார்ச் 26- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் கலை விழா (2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அமைப்பின் தலைவரும் மூன்றாம் ஆண்டு பி.டெக் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவியுமான செ. சல்மா வரவேற்புரை வழங்கினார்.

பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் இரா.மல்லிகா தொடக்கவுரையாற்றினார். அவர் உரையாற்றும் போது மாணவர்கள் கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும் ஆர்வமுடன் பங்கேற்று சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார்.

சமூக வளர்ச்சி

நிகழ்வின் சிறப்பு அம்சமாக, சமூக ஆர்வலர் நடிகை, பாடாலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் குரல் கலைஞர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்ட மு.ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் மாணவர்களிடம் சமூக வளர்ச்சிக்கும் படைப்பாற்றல் முயற்சிகளுக்கும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தந்தை பெரியார் அளித்து சென்ற சமத்துவம் என்னும் விளக்கை மாணவர்கள் கையில் ஏந்தி எங்கும் எதிலும் அனைவரும் சமம் என்ற கொள்கையை பின்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பெண்களை குறைத்து மதிப் பிடாமல் அவர்களின் திறமையை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜப்பானிய விஞ்ஞானி

நம்மாழ்வார் அவர்களை சந்தித்த பின் பிடி கத்திரிக் காய்க்கு எதிராக குரல் கொடுத் ததை நினைவு கூர்ந்தார். அவர் ஜப்பானிய விஞ்ஞானி எழுதிய ஒற்றைப் புல் புரட்சி புத்தகத்தை பற்றி குறிப்பிட்டு அதனுடைய கருத்துக்களை அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கினார்.
அதன் பின்னர், வணிகத் துறைத் தலைவர் பேரா சு.சுபேந்திரன், வெற்றிபெற்ற மாணவர்களின் பட்டியலை அறிவித்தார். மாணவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப் படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெரியார் விழா

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா உரையாற்றும் போது மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலைவிழாவாக பெரியார் விழா இருக்கின்றது என்று கூறி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த் துக்களை கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *