பேனா மன்னன் பதில்:
கேள்வி: பண வசதி அதிகம் உள்ளவர்கள் இறை வனை தரிசிக்கும் போது என்ன கேட்பார்கள்?
பதில்: வருமான வரித்துறை அமலாக்கத்துறை ஜிஎஸ்டி கண்களில் தங்கள் கணக்கு தெரியக்கூடாது என்று கேட்டுவிட்டு இப்பொழுது இருக்கும் பணம் போதாது இன்னும் நிறைய வேண்டும் என்று கேட்பார்கள்?
‘தினத்தந்தி’ 25.3.2025
தீர்ப்புகள்
மறுஆய்வு
உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக பிடிப்பட்டன. அவர் மீது வழக்குப் பதியாமல் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து அலகாபாத் நீதிமன்ற வழக்குரைஞர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிபதி யஸ்வந்த் வர்மா ஏற்ெகனவே வழங்கிய தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.