டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, குற்ற உணர்ச்சியோ, கூச்சமோ இல்லாமல் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமிய விழாக்களில் கலந்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
* நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தமிழ்நாட்டு எம்பிக்கள் மோடியை சந்திக்க முடிவு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு,
* ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களின் ஊக்கத் தொகைக்கான வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த பி.வில்சன் எம்.பி. மாநிலங்களவையில் கோரிக்கை.
* டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விவகாரம் – மாநிலங்களவை தலைவர் தன்கர் கார்கே, நட்டாவுடன் ஆலோசனை: தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து கருத்து கேட்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி அலகாபாத் நீதிமன்றத்திற்கு இடமாற்றம், உச்சநீதிமன்றம் உத்தரவு.
* பண விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டில்லி நீதிபதி விவகாரம் மாநிலங்களவையில் விவாதிக்க முடிவு.
*தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்களின் கவலைகளை ஒன்றிய அரசு கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்வு காண வேண்டும், தலையங்கம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தல் ஆண்டில், பீகாரில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தலித் தலைவர் ராஜேஷ் குமாரை நியமித்தது பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது
தி இந்து:
* கல்வி முறையை ஆர்எஸ்எஸ் தனது முழுக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டால் இந்தியா அழிந்துவிடும். – மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
* தொகுதி மறுசீரமைப்பு பாஜகவின் மேலாதிக்கத்தை வலுப்படுத்தக்கூடும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகள் வரையறுக்கப்பட்டு இருந்தால், 2019 ஆம் ஆண்டில் பாஜக கூடுதலாக 14 இடங்களைப் பெற்றிருக்க முடியும் என்கிறார்கள் கட்டுரையாளர்கள் வர்கீஸ் கே. ஜார்ஜ், விக்னேஷ் ராதாகிருஷ்ணன்.
தி டெலிகிராப்:
* மோடியின் ஆட்சியில் அதிகரித்து வரும் சகிப்பின்மை’: குணால் கம்ராவின் நகைச்சுவை சர்ச்சையைத் தூண்டுகிறது; பேச்சு சுதந்திரத்திற்கு தடையா? எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
* ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 29 சதவீத பணியிடங்கள் A, B & C பிரிவுகளில் காலியாக உள்ளன, நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.3.2025
Leave a Comment