திருவள்ளூர், மார்ச்25- 9.3.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மா.மணி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர். கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். துவக்கவுரை பொதட்டூர் புவியரசன் வழங்கினார். பிறகு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கருத்துரை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட கலந் துரையாடல் கூட்டத்தில் சிதம்பரத் தில் நடைபெற்ற பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளைக் கழகங்கள் அமைத்தல் என தீர்மானிக்கப்பட்டது.
தோழர்கள் சீ.நி.வீரமணி, மா.தலைவர் ப. க. ந.ரமேஷ் (மா துணை செயலாளர்), க.ஏ. மோகனவேலு பொதுக் குழு உறுப்பினர் பாடகர் ந.பன்னீர் செல்வம், க.ஏ.தமிழ்முரசு, தி.சுந்தரம், சத்ரஞ்செயபுரம் மணி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் இரா.ஸ்டாலின் நன்றியுரை கூறினார்.
இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.