ரவீந்திரநாத் வெற்றி செல்லாது காலம் தாழ்த்தி நீதி வென்றுள்ளது: ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பேட்டி

1 Min Read

ஈரோடு, ஜூலை 8 – தேனி  நாடாளுமனறஉறுப்பினைர்  ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமனறம்  தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில், அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்டு 2ஆம் இடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும்  தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங் கோவன்  ஈரோட்டில்  அளித்தபேட்டி வருமாறு: 

தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ரவீந்திர நாத் வெற்றி பெற்றது  செல்லாது என  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நாட்டில் தர்மமும், நியாயமும் இன்னும் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தின் போது பல முறைகேடுகள் நடந்தன. முறை கேடுகளை எல்லாம் அப் போதைய தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. 

ஆனால், நாங்கள் கொடுத்த  புகார் மீது எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல். முழுக்க முழுக்க ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் தேர்தலில் எனக்கு தோல்வியாக அமைந்தது. காலம் தாழ்த்திதர்மமும், நீதியும் வென்றுள்ளது. வழக்கு தொடர்ந் தவருக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும்  தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *