மெல்போர்னில் உள்ள நரேவாரனில் சாந்தி அவர்களின் இல்லத்தில் குடும்ப சந்திப்பு நடைபெற்றது. சாந்தியின் ஒருங்கிணைப்பில் வாசகர் வட்டம் என்கிற புத்தக திறனாய்வு இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அவரது அழைப்பினை ஏற்று ஆசிரியர் அவர்கள் சாந்தியின் இல்லத்திற்குச் சென்று அவர்களின் நூலகத்தை பார்வையிட்டார். சாந்தி அவர்களின் கணவர் சிவா மற்றும் தாயார் கந்தமாலி அவர்களிடம் வந்தவாசி பகுதியில் வாழும் தமிழ் சமணர்கள் குறித்தும், சமணம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது பற்றியும் உரையாடினார்.
இந்த சந்திப்பில் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத் தலைவர் அண்ணாமலை மகிழ்நன், மெல்போர்ன் தோழர் மூர்த்தி, மற்றும் வாசகர் வட்டத்தை தொடங்கி வைத்து அதனை வழிநடத்தி வரும் எழுத்தாளர் அ.முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பில் ஆசிரியர் அவர்களை டேல் ஷெப்பேட் சந்தித்தார். 18 வயதில் சாலை விபத்து ஒன்றில் தனது நடக்கும் திறனை இழந்த டேல் அது முதல் தொடர்ச்சியாக போராடி சைக்கிளில் சென்று விபத்துக்குளாகிறவர்களுக்கு இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யும் சட்டம் உருவாக வழிவகுத்தார். இந்த சட்டம் விக்டோரியா மாகாணத்தில் டேல் அவர்களின் பெயரிலேயே இயற்றப்பட்டுள்ளது. அவரது பெரும் சாதனையை ஆசிரியர் பாராட்டினார்.
மெல்போர்னில் வாழும் வாசகர் வட்டத் தோழர்கள் சுந்தரி, தினகரன், மது, ராஜா, பிரகாஷ் ஆகியோர் ஆசிரியருடன் பல்வேறு கருத்துகள் குறித்து உரையாடி மகிழ்ந்தனர்.