ராகுல் காந்தி பதவி நீக்கம் விரைவில் நீதி கிடைக்கும் ப.சிதம்பரம் கருத்து

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 8 காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட் டர் பதிவில் கூறியிருப்ப தாவது:-ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத் தான். இதனைத்தொடர்ந்து நடை பெற்ற அனைத்தும் அந்த தகுதி நீக் கத்தை நியாயப்படுத்தும் முயற்சியாகும். நான் முன்பு கூறியதை மீண்டும் சொல் கிறேன். இந்திய தண்டனை சட்டம் அமலில் உள்ள 162 ஆண்டுகளில், அவதூறு (வாய்மொழி அவதூறு) வழக்குக்கு நீதிமன்றம் அதிகபட்ச மாக 2 ஆண்டுகள் தண்டனை விதித் துள்ளது. வழக்கு பற்றிய அனைத் தையும், நீதிமன்ற தீர்ப்பும் அந்த உண்மையை கூறுகிறது. ஒரு நாள் நீதி கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *