காரைக்குடியில் சுழலும் சொற்போர், 4 ஒன்றியங்களில் பரப்புரைக் கூட்டங்கள் மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!

viduthalai
3 Min Read

காரைக்குடி, மார்ச் 24- காரைக்குடி மாவட்டக் கலந்துற வாடல் கூட்டம் 23.03.2025 ஞாயிறு காலை 10.30 மணி அளவில் காரைக்குடி குறள் அரங்கில் மாவட்டத் தலைவர் ம. கு. வைகறை தலைமையில், மாவட்டக் காப்பாளர் சாமி. திரா விடமணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் தி. ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அனைரையும் வரவேற்று உரையாற்றிய மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி மாவட் டத்தின் தொடர் செயல்பாடுகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தனது கருத்துரையில், கூட்டத்தின் நோக்கம் குறித்தும், சிதம்பரம் நகரில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களைச் செயலாற்றுதல் குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பரப்புரைத் திட்டங்கள் குறித்தும் விரிவான, தெளிவான கருத்துரையாற்றினார். தொடர்ந்து, மாவட்டக் கழகத்தின் அனைத்து அணித் தோழர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

திராவிடர் கழகம்

நிகழ்வில் மாநில கிராமப் பிரச்சார குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், கழகச் சொற்பொழிவாளர் இரா. பெரியார் செல்வன், தலைமைக் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் தங்களது உரையில், மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்தும் திராவிடர் கழகத்தின் தனித்தன்மை, தமிழர்தலைவர் ஆசிரியரின் அணுகுமுறை குறித்தும் எடுத்துரைத்தனர். மாவட்ட கழக காப்பாளர் சாமி. திராவிடமணி தனது உரையில், பிரச்சாரம் நடத்தாத இடங்களில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும், மாவட்டக் கழகத்தின் அனைத்து பணிகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்குவோம் என்றும் எடுத்துரைத்தார்.

இறுதியாக மாவட்டத் தலைவர் ம. கு.வைகறை உரை யில், மாவட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட களப்பணிகளை விரிவாக பட்டியலிட்டும், இந்த ஆண்டு செயல்படுத்த இருக்கும் திட்டங்களை எடுத்துரைத்தார். கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார், ப. க மாவட்ட ஆலோசகர் விஞ்ஞானி சு. முழுமதி, பொதுக்குழு உறுப்பினர் தி. ஜெயலட்சுமி, ப.க மாவட்ட துணைச் செயலாளர் இரா.முத்துலட்சுமி, காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், காரைக்குடி மாநகர துணைத் தலைவர் ஆ. பழனிவேல் ராசன், தேவகோட்டை நகரத் தலைவர் வீ. முருகப்பன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் துரை. செல்வம் முடியரசன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் குமரன் தாஸ், தி. தொ. க செயலாளர் சொ. சேகர், தி. புருனோ என்னாரெசு, காளையார் கோயில் அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய பொறுப்பாளர்கள்

காளையார்கோயில் ஒன்றியத் தலைவர் குருந்தணி டி. அழகர் சாமி
திருவாடானை ஒன்றிய தலைவர்
ஆண்டாவூரணி புருசோத்தமன்,
காரைக்குடி மாநகர துணைச் செயலாளர்
பனிப்புலான் வயல்: தாஸ்

தீர்மானங்கள்

சிதம்பரம் நகரில் நடை பெற்ற கழக பொதுக் குழு வின் தீர்மானங்களை ஏற்ப துடன் செயலாக்குதன தீர்மா னிக்கப்படுகிறது.
உலகம் பெரியார் மயம் பெரியார் உலக மயம் என்ற பெரும்பணியில் ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
ச. பிரின்சு என்னாரெசு பெரியாரை கழக துணைப் பொதுச்செயலாளராக நியமித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு இக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

கழக ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாக்களை திரட்டுவதன தீர்மானிக்கப்படுகிறது.
காரைக்குடியில் சுழலும் சொற்போர், காளையார் கோயில், கல்லல், பள்ளத்தூர், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் பரப்புரை கூட்டம் நடத்துவதெனமும் தீர்மானிக்கப்படுகிறது.

தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு கழகப் பொறுப்பேற்று 48 ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் தமிழர் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வின் தொடக்கத்தில் தூய தொண்டறத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் காப்பாளர் சாமி.திராவிடமணிக்கு பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர் தி.செயலட்சுமி உண்மை இதழுக்கும், புருனோஎன்னாரெசு பெரியார் பிஞ்சு இதழுக்கும் சந்தா வழங்கி மகிழ்ந்தார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *