பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 24- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் மாணவா்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் பெற்றோர், தலைமை ஆசிரியா், உள்ளாட்சி பிரதிநிதி, தன்னார்வலா்கள், கல்வியாளா்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

வளர்ச்சிப் பணிகள்

இந்தக் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக கட்டமைக்கப்படும். அந்தவகையில் கடந்த ஆகஸ்டில் புதிய குழுக்கள் கட்டமைக்கப்பட்டன. இதையடுத்து, எஸ்எம்சி கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு பள்ளி வளா்ச்சிப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடையாள அட்டை

இந்த நிலையில், பள்ளி மேலாண்மை குழுவின் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்எம்சி குழு உறுப்பினா்களுக்கான அடையாள அட்டை மற்றும் லெட்டா் பேடை பள்ளி அளவிலேயே தயார் செய்து வழங்க வேண்டும்.
இதற்கான மாதிரி வடிவம் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இதுசார்ந்து உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *