கலாம் மாணவர் மன்றம் சார்பில் கல்விச்சூழல் குறித்த உரையாடல்

viduthalai
1 Min Read

திருச்சி, மார்ச் 24 கலாம் மாணவர் மன்றம் சார்பில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவுடன் இன்றைய கல்வி சூழல் குறித்த உரையாடல் கடந்த 23.3.2025 ஞாயிறு அன்று திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

இந்த உரையாடலில் தமிழ்நாட்டின் இன்றைய கல்விச் சூழல், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான தீர்வுகளுக்கான உரை யாடல்களை மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஆகிய விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தில், திராவிட தொழிலாளர் கழக பொறுப்பாளர்கள், கலாம் மாணவர் மன்ற உறுப்பினர்கள், மற்றும் மேக்நாட் அறிவியல் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கல்விச்சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்வுகளை கலாம் மாணவர் மன்றம் முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *