கலாம் மாணவர் மன்றம் சார்பில் கல்விச்சூழல் குறித்த உரையாடல்

1 Min Read

திருச்சி, மார்ச் 24 கலாம் மாணவர் மன்றம் சார்பில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவுடன் இன்றைய கல்வி சூழல் குறித்த உரையாடல் கடந்த 23.3.2025 ஞாயிறு அன்று திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

இந்த உரையாடலில் தமிழ்நாட்டின் இன்றைய கல்விச் சூழல், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான தீர்வுகளுக்கான உரை யாடல்களை மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஆகிய விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தில், திராவிட தொழிலாளர் கழக பொறுப்பாளர்கள், கலாம் மாணவர் மன்ற உறுப்பினர்கள், மற்றும் மேக்நாட் அறிவியல் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கல்விச்சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு நிகழ்வுகளை கலாம் மாணவர் மன்றம் முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *