உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து உடல் நலம் விசாரிப்பு!

0 Min Read

உளுந்தூர்பேட்டை,மார்ச் 24 உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்க.செல்லமுத்து (வயது 94) அண்மையில் குளியலறையில் மயங்கி விழுந்த நிலையில், தலையில் காயம் ஏற்பட்டு தக்க சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று (23.3.2025) மாலை 5 மணி அளவில் அவரது இல்லம் சென்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உடல் நலம் விசாரித்து, ஆறுதல் மற்றும் தைரியம் கூறினார்.

உடன் விழுப்புரம் கழக மாவட்ட செயலாளர் அரங்க பரணிதரன், மாவட்ட கழக துணைச் செயலாளர் முத்து, பெரியவரின் மகன் செல்வகுமார் ஆகியோர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *