குடந்தை, மார்ச் 24 கும்பகோணம் கழக மாவட்டம் , பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிந்தனைக் களம் – 2, கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேசன் பள்ளி பழைய கட்டடத்தில் கடந்த 22.03.2025 அன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சா. வரதராஜன் தலைமையேற்றார்.
கோவி. பெரியார் கண்ணன் வர வேற்பு உரையாற்றினார் .
“எங்கே செல்லும் இந்தப் பாதை?” என்னும் பொருளில் பொருளாதாரப் பார்வை என்னும் முதல் அமர்வில், குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பேராசிரியர் ம.சேது ராமன் உரையாற்றினர்.
முதலில் பொருளாதாரம் என்றால் என்ன? என்பதில் தொடங்கி, இந்தி யாவில் பொருளாதாரம் எப்படி இருக்கிறது? என்பதைப் பற்றி எல்லாம் எடுத்துரைத்தார்.
தஞ்சை இரா. பெரியார் செல்வன்
தொடர்ந்து சமுதாயப் பார்வை எனும் இரண்டாவது அமர்வில், கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் உரையாற்றினர்.
பெரியாரின் பெரும் பணி எப்படி இந்த சமுதாயத்தை எல்லாம் மாற்றியது, பெரியாரின் மேல் இன்றும் விமர்சனங்கள் வைக்கப்படுவது எதனால் என்பதை ஒவ்வொரு நிகழ்வாக எடுத்துக்காட்டி எளிமையாக விளக்கினர்.
நிறைவாக ஒன்றிய பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் கோவி. ராஜீவ் காந்தி நன்றி உரையாற்றினார்.
கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் திரு ஞானசம்பந்தம், கழக ஒன்றிய செயலாளர் சு. கலியமூர்த்தி,ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.சேகர், கல்வியாளர் சே.நெப்போலி யன், கழக மாவட்ட செயலாளர் சு.துரைராசு , மாவட்ட தலைவர் கு.நிம்மதி ஒன்றிய பொறுப்பாளர்கள் கே.ஜனார்த்தனன், நகர தலைவர் வெ. இளங்கோவன், வி. மதி வாணன், வலங்கை ஒன்றிய செயலாளர் பவானி சங்கர், நாச்சியார் கோவில் குணசேகரன், மகளிரணி பொறுப்பாளர் பி.பொம்மி கணேசன், லயன்ஸ் சங்க தலைவர் பெ.குணசேகரன், குடந்தை மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் திரிபுரசுந்தரி, கும்பகோணம் ரியாஸ் அகமது, தியாக சமுத்திரம் பஞ்சாபி, பாவை பைந்தமிழ் பேரவை செயலாளர் கமலஹாசன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செய லாளர் துரைசாமி, பாபநாசம் ஓய்வூதியர் சங்கப் பொறுப்பாளர் உரு.உலகநாதன், உம்பளாபாடி பிரகலாதன், கோவிந்தராஜ், தங்கராசு, இரும்புத்தலை தீபக், சாலியமங்கலம் பாரதி, வளையப் பேட்டை அய்யப்பன், குமார், நாகராஜன், பாபநாசம் தவச்செல்வன், சுந்தர பெருமாள் கோவில் செல்வராஜ், பி.மோகன், விஜயகுமார், கோட்டச்சேரி கஜேந்திரன், ஸ்டீபன் ஞானசேகர், பாபநாசம் பென்னோ. சுரேஷ், கோபுராஜபுரம் மாணிக்கம், உத்தாணி பத்மநாபன் உள்பட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.