ஜாதி மறுப்புத் திருமணம் செய்த பெண்ணுக்கு தொட்டியம் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கோட்டாட்சியர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசியல்

மதுரை, ஜூலை 8- ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கோயிலுக்குள் அனும திக்க மறுக்கப்பட்டது தொடர்பாக கோட்டாட் சியர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டி யத்தைச் சேர்ந்த வனிதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”நானும் செந்தில் குமார் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நான் வேறு சமூகத்தைச் சேர்ந் தவர் என்பதால் என்னையும், என் கணவரையும் எங்கள் ஊரில் உள் சிறீ பகவதி அம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து வருகின் றனர். கிராம திருவிழாக்களிலும் எங்களை அனுமதிப்பது இல்லை.

இந்நிலையில் கோயிலில் ஜூலை 9இல் குடமுழுக்கு நடை பெறுகிறது. இதற்கு எங்களிடம் வரி வாங்க வில்லை. குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கூடாது என கூறியுள் ளனர். எனவே குடமுழுவுக்கு  நிகழ் வுக்கு எங்களிடம் வரி வசூலிக் குவும், சாமி தரிசனம் செய்ய எங் களை அனுமதிக்கவும் உத்தரவிட வேண் டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி   விசாரித்து பிறப்பித்த உத்தரவு: ”மனுதாரர் வேறு சமூகத்தை சேர்ந் தவர் என்பதால் 3 ஆண்டுகள் கிராம விழாக்கள் மற்றும் கோயில் விழாக்களில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதா? இது போன்ற பழக்க வழக்கம் தொட் டியம் கிராமத்தில் உள்ளதா என வருவாய் கோட்டாட்சியர் விசா ரணை நடத்தி ஜூலை 20இல் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும். குடமுழுக்கு விழாவுக்கு மனுதாரரிடம் வரி வசூலிக்க வேண்டும். குடமுழுக்கில் மனு தாரரை அனுமதிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் கூறி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *