இந்தியா கூட்டணி நிர்வாகிகளை அழைத்து கிளைக் கழகத் தொடக்க விழா! மேட்டூர் மாவட்டக் கழக தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்!

viduthalai
2 Min Read

மேட்டூர், மார்ச் 24 கடந்த 22.3.2025 அன்று காலை 10 மணிக்கு மேட்டூர் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் சின்னப்பம்பட்டி சுயமரியாதைச் சுடரொளிகள் மு.உலகநாதன் –  உ.மாரியம்மாள் ஆகியோரின் மகன்கள் உலக நக்கீரன்- நா.தமிழ்மணி, உலக கென்னடி – கெ.கவுசல்யா வாழ்விணையர்களின் இல்லத்தில் நடைபெற்றது.  மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா.பாலு தலைமை வகித்தார். சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, மாவட்டச் செயலாளர் சி.பூபதி, மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவிஅன்புமணி முன்னிலை வகித்தனர்.

மேட்டூர் நகரத் தலைவர்

இரா. கலையரசன், உலக கென்னடி, உலக நக்கீரன், சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர் பா.விஜய், கஞ்சநாயக்கன்பட்டி தோழர்
கே.எஸ்.சிறீதர், சேலம் மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் துரை சக்திவேல் ந.தமிழ்மணி,
கெ. கவுசல்யா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து, தோழர்கள் இயக்க வளர்ச்சிக்கான ஆலோசனைகளை தெரிவித்தனர்.
முன்னதாக, சுயமரியாதைச் சுடரொளிகள் மு.உலகநாதன்-

உ.மாரியம்மாள் படத்தினை, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெய ராமன் திறந்து வைத்தார்.

சுயமரியாதைச் சுடரொளிகள் மு. உலகநாதன்- உ.மாரியம்மாள் குடும்பத்தினரும், கழகத் தோழர்க ளும், சுயமரியாதைச் சுடரொளிகளின் இயக்க பணிகளை நினைவு கூர்ந்து, மரியாதை செலுத்தினர்.

மகளிரணி புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு!
கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்றிய, கிளைக் கழக, கிளைக் கழக மகளிரணி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட னர்.
தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் கழகம்
 தலைவர்: உலக நக்கீரன்
பாப்பம்பட்டி (சின்னப்பம்பட்டி) கிளைக் கழகம்
தலைவர்: உலக கென்னடி
செயலாளர்: சின்னப்பன்
தாரமங்கலம் ஒன்றிய மகளிரணி
 தலைவர்: ந.தமிழ்மணி
 செயலாளர்: கெ.கௌசல்யா
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
கிளைக் கழக  தொடக்க விழா 19.4.2025  அன்று, காலை 10 மணி யளவில் நடத்துவது,
கிளை கழக துவக்க விழாவை, சமூக நீதியின்பால் பற்று கொண்ட  தலைவர்களையும், இந்தியா கூட்டணியின் பொறுப்பாளர்களையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து, சிறப்பாக நடத்துவது,
சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த சுயமரியாதை சுடரொளிகளின் படங்களை திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்துவது,
ஒன்றிய கழக, கிளைக் கழக, கிளைக் கழக மகளிரணி துவக்க விழா விற்கு மேட்டூர், சேலம், ஆத்தூர், நாமக்கல் மாவட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழகத் தோழர்களை அழைத்து சிறப்பு செய்வது,
தாரமங்கலம் ஒன்றிய கழகத் தலைவர் உலக நக்கீரனின் இல்லத்திற்கு முன்பு கழக இலட்சிய கொடியேற்றி, தமிழர் தலைவர் ஆசிரியரின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கல்வெட்டு நிறுவி திறப்பு விழா நடத்துவது என மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தோழர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், தேனீர் விருந்தும் உலக நக்கீரன்-ந.தமிழ்மணி, உலக கென்னடி- கெ.கவு சல்யா வாழ்வினையர்கள் வழங்கி உபசரித்தனர்.
தாரமங்கலம் ஒன்றிய மகளிரணிச் தலைவர் ந. தமிழ்மணி நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *