கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 24.3.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மூட்டை மூட்டையாக எரிந்த பணத்தின் காட்சிப் பதிவு வெளியீடு: ஏனையோர்க்கு சட்டம் எப்படி பாயுமோ, அதே போல் நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தலையங்க செய்தி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழ்நாடு முதலமைச்சரின் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டம், நமது நாட்டின் முக்கிய பிரச்சினைகளான மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மற்றும் ஒன்றிய அரசாங்கத்தால் அதிகாரமயப்படுத்தப்பட்டது அதிகரித்து வருவது குறித்தும் விவாதித்தது என்கிறார்கள் கட்டுரையாளர்கள் சேலம் தரணிதரன் மற்றும் தக்சனா இந்துமதி.

* ஒன்றிய அரசின் வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) செயல்படுத்தலுக்கு எதிராக திமுகவின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராசன் விரிவான விளக்கம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு தருவதற்கு அரசமைப்பு (106ஆவது திருத்தம்) சட்டத்தை நிறைவேற்றிய ஒன்றிய அரசு, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்று கூறியிருந்தது.

தி டெலிகிராப்:

* பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ‘இஃப்தார்’ அழைப்பை முஸ்லிம் அமைப்பு நிராகரித்தது; வக்ஃப் மசோதாவை நிதிஷ் குமார் ஆதரிப்பதால், இந்த எதிர்வினை.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *