தஞ்சையில் தந்தை பெரியாரின் கருப்புச் சட்டை படையில் புதிய இளைஞர்கள் இணைந்தனர்

Viduthalai
1 Min Read

தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் பீட்டர் கென்னடி மற்றும் மரிய ஜெயராணி என்கின்ற செந்நிலா ஆகியோரு டைய இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் சுந்தர் மகாலில் 02 .07. 2023 காலை 11 மணியளவில் நடைபெற்றது.

மணமக்கள் பி.கே. உதயன் மற்றும் எஸ். வேணு என்கின்ற விஷ்ணு தேவி ஆகியோரின் ஜாதி, மதம்,  மூட நம்பிக்கை கடந்த சுய மரியாதை திருமணத்தின் வர வேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜாதி மதத்திற்கான எந்த வித அடையாள சின்னங்களும் இல்லாமல் கருப்புச் சட்டை அணிந்து தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் பதாகை யோடு  கலந்து கொள்ள வந்தவர் களை கழகத்தின் சார்பில் வர வேற்று தொடர்பு முகவரி சேமிக் கப்பட்டது. அனைவரும் தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஏற் றுக் கொண்ட சிறந்த பகுத்தறிவா ளர்களாக, பல்துறை கல்வியாளர் களாக விளங்குபவர்கள்.

திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் சேலம் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி மணமக் களை வாழ்த்தி உரையாற்றினார்.

தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க குருசாமி, தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்ய னார், தஞ்சை மாவட்ட கழக தொழிலாளர் அணியின் தலைவர் ச.சந்துரு, நெய்வேலி வெ.ஞானசேக ரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *