ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

8.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* வாரங்கல் நகரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க முடிவு. மாநிலத்திற்கு எந்தத் திட்டத்தை யும் நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு.

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* அவதூறு வழக்கில் தண்டனையை குஜராத் நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய ராகுல் சார்பில் காங்கிரஸ் முடிவு.

* கோயில்கள் தொடர்பான 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்த ரங்கராஜன் நரசிம்மன் என்ற மனுதாரரை, தான் தொடர்ந்த வழக்குகளின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு ரூ.50,000 வீதம் ரூ.3.5 லட்சம் டெபாசிட் செய்ய சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு.

* அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை ஆளுநர் பெற்றுக் கொண்ட விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ‘இன்று மணிப்பூர் என்றால், நாளை கேரளாவாக இருக்கும்’ என்று வடகிழக்கு மாநில வன்முறைகள் குறித்து கத்தோலிக்க பிஷப் கவலை. வடகிழக்கு மாநிலத் தில் நடந்து வரும் வன்முறை “நுணுக்கமாக திட்டமிடப் பட்டது” என்றும் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்

* “ரஷ்ய அதிபருடன் உக்ரைன் போரைப் பற்றி விவாதிக்க நேரம் தேடும் பிரதமர், சில மாதங்களுக்குப் பிறகும் தனது சொந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தில் போர் போன்ற சூழல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன் – என்பது அவரது விமர்சகர்களிடம் இருந்து எழும் கேள்வி அல்ல. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எழுப்பும் கேள்வி,” என்று கேரளாவில் இருந்து வெளிவரும் சர்ச் ஆர்கன் தனது சமீபத்திய இதழின் தலையங்கத்தில் கூறியுள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *