இந்நாள் – அந்நாள்

1 Min Read

புரட்சியாளர் பகத்சிங் எழுதிய புத்தகத்தை பிரிட்டீஷ் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தந்தை பெரியார் வெளியிட்டார். உலக நாத்திக நாளும் இன்றே.

நான் ஏன் நாத்திகன் ஆனேன்? (Why i am an atheist) என்பது பகத் சிங்கினால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தைக்கு 1931 இல் எழுதியக் கடிதமாகும். அக்கடிதத்தை பகத் சிங்கின் தந்தை லாகூரிலிருந்து வெளிவரும் ஜனங்கள் என்னும் ஆங்கில தினப் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார். பின்பு நூல் வடிவில் வெளியானது. பகத் சிங் தனது கடவுள் மறுப்பு நிலைப்பாட்டை விளக்கி இக்கட்டு ரையை எழுதினார்.

பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற இந்தக் கட்டுரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப.ஜீவானந்தம் தமிழாக்கம் செய்தார். ப.ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோது, கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்தப் புத்தகம் வெளியானது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். பெரியார் தனது உண்மை விளக்கம் அச்சகத்தின் மூலம், குடியரசு பதிப்பகத்தில் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய வழக்கில் ராஜகுரு, சுகதேவ் ஆகியோருடன் பகத்சிங்கும் 1931, மார்ச் 23 இல்(இதே நாளில்) தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *