திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல் பிளாசா அருகே தனியார் கல்லூரி பகுதியில் நேற்று சமயபுரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், சமயபுரத்தைச் சேர்ந்த முரளி, இவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் அவர் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.