கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.3.2025

viduthalai
2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம்.

* அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் தான் வெற்றி பெற முடியும் – நியாயமான தொகுதி மறுசீரமைப்பு அடையும் வரை இணைந்து போராடுவோம்: ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

* தென்மாநிலங்களின் தொகுதி குறைப்பு பா.ஜ.வின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும். இது அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டிய மிக முக்கியமான ஆபத்து. – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

* தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசுகையில் ‘‘தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் அய்தராபாத்தில் நடத்தப்படும்’’ என்றார்.

* இது தென்மாநிலங்கள் மீதான அரசியல் தாக்குதல்; எங்கள் குரல் நசுக்கப்படுவதை ஏற்க மாட்டோம்: கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார்.

* பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடுக, பி.ஆர்.எஸ். கட்சியின் கே.டி.ராமராவ்

* இனக்கலவரத்தால் பாதித்த மணிப்பூரில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு: நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் மணிப்பூரில் நிலைமையை நேரில் ஆய்வு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாட்டின் மிக உயர்ந்த பிரதிநிதித்துவ அமைப்பில் இடங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கு மக்கள் தொகை மட்டுமே அளவுகோலாக இருக்க கூடாது என்று பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவரும் ஒடிசா மேனாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக் காணொளி மூலம் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம்; டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க 3 பேர் குழு அமைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி. விசாரணை அறிக்கை வரும் வரையிலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த பணியும் ஒதுக்கக் கூடாது என்றும் டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

* தொகுதி மறுசீரமைப்பு: நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தையும் குறைக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் கடிதம்.

*ஒடிசாவில் தினமும் மூன்று குழந்தை திருமணங்கள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, நபரங்பூர் மாவட்டம் 1,347 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது

தி டெலிகிராப்:

* உ.பி. சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதிக்கு பச்சை வண்ணம் அடித்தால், காவி கலரையும் அடிக்க வேண்டும், சங் பரிவார் அடாவடி.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *