‘மே பதினேழு’ இயக்கம் நடத்திய தமிழ்த் தேசிய பெருவிழா

2 Min Read

மே பதினேழு இயக்கத்தின் ஏற்பாட் டில் தமிழ்த் தேசிய பெருவிழா 2025, மார்ச் 15-16 ஆகிய இரு நாள் களில் நடைபெற்றது. சென்னை – சைதாப்பேட்டையில் நடைபெற்ற இந்த பெருவிழாவானது அறிஞர் அவையமாகவும், பல தரப்பட்ட காந்தள் கலை விழாவாகவும் பகுத்து நடத்தப் பட்டது.

இரண்டு நாள்களும் அறிஞர் அவையம் ஒவ்வொரு தனி அமர்விலும் ‘தமிழ் மக்கள் வரலாறு‘ தமிழர் வாழ்வும் வரலாறும் மற்றும் தமிழர்களும் சமயங்களும் என்ற தலைப்புகளில் அய்ந்து அமர்வுகள், அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என பலதரப்பிட்ட சான்றோர்களும் தங்களது கருத்துகளை அளிக்கப்பட்ட தலைப்பினை ஒட்டி வழங்கினர். ஒவ்வொரு அமர்விலும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.முத்தரசன், மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவஹிருல்லா ஆகியோர் தொடக்கவுரை மற்றும் வாழ்த்துரை வழங்கினர்.
இரண்டாம் நாள் மாலையில் நடைபெற்ற காந்தள் கலை விழாவில் “அருந்திறல் தமிழர்’ வாழ்நாள் சாதனையாளர் விருதினை நினைவில் வாழும் போராளிகள் த.வெள்ளையன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், பூ.சந்திரபோஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

‘தமிழ் கனலி’ செயல்பாட்டாளர் விருது பேராசிரியர் த.ஜெயராமன், வழக்குரைஞர் ஹென்றி டிபென், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழுணர்வாளர் அ.ச.சின்னப்ப தமிழர், ஊடகவியலாளர் ஜெயராணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருதுகளை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் பொறுப்பாளர்கள் வழங்கினர்.

காந்தள் கலை விழாவில் கருத்தியல் சார்ந்த பாடல்களை மேற்கத்திய இசை கொண்டு கலைஞர்கள் பாடி மகிழ்வித்தனர்.

காந்தள் கலை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்படக் கலைஞர் நாசர், இளவரசு ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

கலை விழாவில் பலதரப்பட்ட அரசி யல் கட்சிகள், சமூக அமைப்பினைச் சார்ந்தோர் கலந்து கொண்டனர். அழைப்பின் பேரில் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இரண்டு நாள் பெரு விழா மகிழ்ச் சிக்குரிய விழாவாக மட்டுமின்றி, கருத்தியலுக்கு உரம் சேர்க்கும் விழா வாகவும் அமைந்திருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *