ஊற்றங்கரை, மார்ச் 22 கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் அப்பிநாயக்கன்பட்டியில் கழக புதிய கிளைக் கழக தொடக்க விழா கலந்துரையாடல் 15.03.2025 அன்று மாலை 4 மணியளவில் ஒன்றியச் செய லாளர் சிவராஜியின் “தமிழர் தலைவர்” இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி தலைமை வகித்துப்பேசினார்.
ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ் அனைவரையும் வரவேற்றார். கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தொடக்கவு ரையாற்றினார்.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத் துணைச் செயலாளர் சீனி முத்து. இராஜேசன், மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினர்.
கூட்டத்தில் பழ.வெங்கடாசலம், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோர் கருத்து ரையாற்றினர்.
நிறைவாக கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை. ஜெயராமன் கழக செயல்பாடுகள் மற்றும் அமைப்பு முறை குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி சமூக புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தில் இணைந்து தந்தை பெரியார் புரட்சியாளர் அம்பேத்கர் இலட்சியங்களை வென்றெடுக்க கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமை ஏற்று சிறப்பாக செயலாற்ற புதிய கிளைக் கழக தோழர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
பெரியார் பிஞ்சு சி.செம்மொழி நன்றி கூறினார். கூட்டத்தில் தங்க ராஜி, சரண்ராஜ், சுகுமாரன், கவின், சிலம்பரசன், மாயக்கண்ணன், இராமசாமி, வசந்தமல்லி, பெரியார் பிஞ்சுகள் இசைமொழி, ஓவியா, தீபிகா, யாசின், நீலகண்டன், காலகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட புதிய கிளைக் கழக நிர்வாகிகளை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.செய ராமன் அறிவித்தார்.
கிளைக் கழகத் தலைவர்: தே.சரண்ராஜ். செயலாளர்: கோ.சுகு மாரன். துணைத் தலைவர்: கு.சிலம்பரசன், துணைச் செயலாளர்: இர.கவின், இளைஞரணி தலைவர்:பா.மாயக்கண்ணன் ஆகியோரை கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர். கூட்டத்தில் பங்கேற்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட பெரியார் பிஞ்சுகளுக்கு மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி எழுத்துப் பயிற்சி நோட்டுகள் வழங்கி பெரியார் பிஞ்சு களை உற்சாகப்படுத்தினார்.