பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மேனாள் மாணவர்கள் சந்திப்பு

2 Min Read

அரசியல்

1994 – 1998 ஆண்டு பயின்ற பொறியியல் மாணவர்களின் சந்திப்பு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 08.07.2023 அன்று பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேனாள் மாணவர் சங்க தலைவர் பேரா.த.கவிதா  வரவேற்புரை ஆற்றினார். 

பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி  பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேனாள் துணைவேந்தர் பேரா. நல்.இராமச்சந்திரன்  அவர்களின்  படத்தை வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி உரையாற்றும் போது, 

நமது மேனாள் மாணவர்களை சந்திப்பது ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும் என்றார். இன்று உலகம் முழுவதும் நமது பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் மேனாள் மாணவர்கள் உள்ளனர். உலகத்தில் எங்கு சென்றாலும் நமது மேனாள் மாணவர்களை சந்திக்க முடிகிறது. இங்கு சுமிதா அவர்கள் உரையாற்றும் போதும் இடஒதுக்கீட்டினை பற்றி கூறினார்கள். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தில் பெண்களுக்கு 100 சதவிகித இடஒதுக்கீடு என்று பேசியது சிறப்பான சிந்தனையாகும் என்றார். இக்கல் லூரியை பெண்களுக்கான பொறியியல் கல்லூரியாக ஆரம்பிக்கும் பொழுது பலர் பல விதமாக பேசினார்கள். ஆனால் அன்று ஆரம்பிக்கப்பட்ட பெண்களுக்கான பொறியியல் கல்லூரி தான் இன்று பல மாணவர்களை சிறப்பான பணியில் அமர்த்தியுள்ளது. மேலும் வேலை கேட்கமாட்டோம் ‘வேலை கொடுப்போம்’ என்ற வாசகத் திற்கு பலரும் பல தொழில்களை நடத்தி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உடல் நலத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். பல மேனாள் மாணவர்கள் தாங்கள் இக்கல்லூரியில் பயின்றதால் பல சிறப்புகளை பெற்று இன்றும் ஒரு நல்ல நிலையில் உள்ளோம் என்று கூறினார்கள். 

மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பாக  ரூ.2,00,000 காசோலையை வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களிடம் அளித்தார்கள். சிறப்பாக இந்நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்திய கணினி துறை பேராசிரியர் கவிதா அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.  மேனாள் மாணவர் பூங்கொடி  நன்றியுரை வழங்கினார்.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *