காவேரிப்பட்டணம் இராஜேஸ்வரி மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

1 Min Read

காவேரிப்பட்டணம், மார்ச் 22- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் திராவிடர் கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் அவர்களின் உடன்பிறந்த அண்ணார் காவேரிப்பட்டணம் தா.சண்முகம் அவர்களின் வாழ்விணையர் பணி நிறைவுப் பெற்ற அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.இராஜேஸ்வரி அவர்கள் வயது மூப்பின் காரணமாக 21.3.2025 அன்று விடியற் காலை 4.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அன்னாரது மறைவுச் செய்தி அறிந்து கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டத் துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்தின், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்தரபாபு, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா உள்பட கழகத்தோழர்கள் கலந்துக் கொண்டு மாலை அணிவித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *