காவேரிப்பட்டணம், மார்ச் 22- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் திராவிடர் கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் அவர்களின் உடன்பிறந்த அண்ணார் காவேரிப்பட்டணம் தா.சண்முகம் அவர்களின் வாழ்விணையர் பணி நிறைவுப் பெற்ற அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.இராஜேஸ்வரி அவர்கள் வயது மூப்பின் காரணமாக 21.3.2025 அன்று விடியற் காலை 4.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அன்னாரது மறைவுச் செய்தி அறிந்து கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டத் துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்தின், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்தரபாபு, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா உள்பட கழகத்தோழர்கள் கலந்துக் கொண்டு மாலை அணிவித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.