கீவ், ஜூலை 9 உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று (8.7.2023) 500-ஆவது நாளை எட்டியது. இந்தப் போரால் உக்ரைனில் மட்டும் இதுவரை 9,083 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் 43,000 வீரர்களும் உக்ரைன் ராணுவத்தில் 17,500 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதன் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இந்த போர் நேற்று (8.7.2023) 500-ஆவது நாளை எட்டியது. உக்ரைனுக்கு அமெரிக்காவும் அய்ரோப்பிய நாடுகளும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
உக்ரைன் போர் – 500ஆவது நாள்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books