தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில் அடிப்படை வசதிக்காக ரூ.1087 கோடி ஒதுக்கீடு

2 Min Read

சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.1,087.33 கோடிக்கு நிர்வாக ஒப்புதலுடன், வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அடிப்படை வசதி

சட்டப்பேரவையில் மார்ச் 14-ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட நிதி நிலை அறிக்கை அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு பெறும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் நோக்கில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-இன் கீழ், வரும் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2021-2022 முதல் 2025-2026 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில், 2025-2026-ஆம் ஆண்டில் 2,338 கிராம ஊராட்சிகளில் ரூ.1,091.38 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசுக்கு ஊரக வளர்ச்சி ஆணையர் அனுப்பிய கடிதத்தில், முந்தைய ஆண்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தின் 7 கிராமங்கள், புதுக்கோட்டை, நாமக்கல்லில் தலா ஒரு கிராமம் என 9 கிராமங்கள் தவிர்த்து 2,329 கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,087.33 கோடி ஒதுக்கும்படி கோரினார். இதை ஏற்ற தமிழ்நாடு அரசு, நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

குழு முடிவு செய்யும்

கடந்த 4 ஆண்டுகளில் திட்டத்தின்கீழ் பெற்ற அனுபவம் அடிப்படையில் குளங்கள், ஊரணிகள் புனரமைப்பு, பொது பயன்பாட்டுக் கட்டடங்கள், சமத்துவ சுடுகாடு, இடுகாடுகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள், தெருக்கள், வீதிகள் மேம்பாடு, தெருவிளக்குகள், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகள் ஆகிய 6 பிரிவுகளுக்கு இடையில் ஒதுக்கீட்டை வட்டார அளவில், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவு செய்யும்.

இந்த ஒதுக்கீட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *