வேடச்சந்தூர், மார்ச் 21- வேடசந்தூரில் 16.3.2025 அன்று மாலை 6 மணிக்கு தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் ஆ.இராமகிருட்டிணன் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு பெரியார் பெருந் தொண்டர் சி.மாரியப்பன் தலைமை வகித்தார்.
முன்னதாக தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாநில கழக ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா. வீரபாண்டியன், பழனி மாவட்ட கழகத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர், கழக பேச்சாளர் பொன். அருண்குமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள் .
நிறைவாக கழக சொற் பொழிவாளர் இரா. பெரியார்செல்வன் அறிவு லகப்பேராசான் தந்தை பெரியாரின் மகத்தான தொண்டினையும், தமிழர் தலைவரின் பேருழைப்பால் தமிழ்சமூகம் கல்வி,வேலை வாய்ப்பில் பெற்றிருக்கும் உயர்வினையும், தந்தை பெரியாரை பாதுகாத்து, தந்தை பெரியாருக்குப்பின் இயக்கத்தை பாதுகாத்து, தமிழர் தலைவரை நமக்கு அளித்துச்சென்ற தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் அளப்பரிய தொண்டினையும், சமூகநீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் பெரும் புகழுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆற்றிவரும் அரும்பணிகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் கருணாநிதி பழனி மாவட்ட ப.க. தலைவர் ச.திராவிடச்செல்வன் பொதுக்குழு உறுப்பினர் சி.ராதா கிருட்டிணன் தாடிக்கொம்பு சதாசிவம், வத்தலகுண்டு சுந்தர், திண்டுக்கல் மாவட்ட மாணவர் கழக தலைவர் சதீசு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.