தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் பிறந்த நாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – வேடசந்தூரில் எழுச்சி

1 Min Read

வேடச்சந்தூர், மார்ச் 21- வேடசந்தூரில் 16.3.2025 அன்று மாலை 6 மணிக்கு தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் ஆ.இராமகிருட்டிணன் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு பெரியார் பெருந் தொண்டர் சி.மாரியப்பன் தலைமை வகித்தார்.

முன்னதாக தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாநில கழக ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா. வீரபாண்டியன், பழனி மாவட்ட கழகத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர், கழக பேச்சாளர் பொன். அருண்குமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள் .

நிறைவாக கழக சொற் பொழிவாளர் இரா. பெரியார்செல்வன் அறிவு லகப்பேராசான் தந்தை பெரியாரின் மகத்தான தொண்டினையும், தமிழர் தலைவரின் பேருழைப்பால் தமிழ்சமூகம் கல்வி,வேலை வாய்ப்பில் பெற்றிருக்கும் உயர்வினையும், தந்தை பெரியாரை பாதுகாத்து, தந்தை பெரியாருக்குப்பின் இயக்கத்தை பாதுகாத்து, தமிழர் தலைவரை நமக்கு அளித்துச்சென்ற தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் அளப்பரிய தொண்டினையும், சமூகநீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் பெரும் புகழுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆற்றிவரும் அரும்பணிகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் கருணாநிதி பழனி மாவட்ட ப.க. தலைவர் ச.திராவிடச்செல்வன் பொதுக்குழு உறுப்பினர் சி.ராதா கிருட்டிணன் தாடிக்கொம்பு சதாசிவம், வத்தலகுண்டு சுந்தர், திண்டுக்கல் மாவட்ட மாணவர் கழக தலைவர் சதீசு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *