எனக்கு ஓய்வு இல்லை – நான் இன்றும் உற்சாகத்துடன் பணியாற்றுகிறேன்: சரத்பவார் பதில்

1 Min Read

அரசியல்

மும்பை, ஜூலை 9- தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற வில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார். மகாராட் டிரா மாநிலத்தில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உடனான மோத லால், அஜித்பவார் உள்ளிட் டோர் அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந் தனர். கடந்த 2 ஆம் தேதி சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல மைச்சராக அஜித்பவார் பதவி யேற்றுக் கொண்டார்.

இதையொட்டி அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண் டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. “பல தவறான விமர்சனங்கள் என் மீது வைக்கப்படு கின்றன.  சரத்பவார் மீது நான் மிகுந்த மரியாதை வைத் துள்ளேன். அவர் ஓய்வு பெற்று இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும். பொதுவாக  அய்.ஏ.எஸ். அதிகாரி கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஓய்வு பெற்று உள்ளனர்” என்று தெரிவித்தார். 

சரத்பவார் இதற்கு பதிலளிக்கும் விதமாக, “நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார்? நான் பிரதமர் ஆகவோ, அமைச்சர் ஆகவோ ஆசைப்பட வில்லை. நான் மக்களுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *