மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்திட விழுப்புரம் கலந்துரையாடலில் தீர்மானம்

viduthalai
1 Min Read

விழுப்புரம், மார்ச் 20- 18.03.2025 அன்று காலை 11:00 மணி அளவில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் விழுப்புரம் நகர பொறுப்பாளர் இரு.இராசேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சே.வ. கோபன்னாவின் வரவேற்புரையுடன் சிறப்பு விருந்தினராக புலவர் இராவணன், மாவட்ட செயலாளர் அரங்க பரணிதரன், மாவட்ட ப.க.தலைவர் துரை திருநாவுக்கரசு, மாவட்ட அமைப்பாளர் கொ.பூங் கான், மாவட்ட துணைத் தலைவர் க.திருநாவுக்கரசு, மாவட்ட துணை செயலாளர் ஏ.இரமேசு, மாவட்ட ப.க.செயலாளர் ரா.செ.சிவராஜ், செஞ்சி நகர செயலாளர் தா.நந்தகுமார், விழுப்புரம் நகர செயலாளர் ச பழனிவேல், பகுத்தறிவு பாடகர் நா.காத்தவரான், மகளிரணி அய்யம்மாள் ராசேந்திரன் ப.க. கவுதமன் இரா.அன்பரசன், இரா.கந்தசாமி ஆகியோர் கருத்துரை கூறவும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றத்துடன் நகர பொறுப் பாளர் தோழர் இரு.இராசேந்திரன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

சிதம்பரம் கழக பொதுக்குழுவின் முடிவுகளை முழுமையாக ஏற்று செயல்படுத்துவதென தீர் மானிக்கப்பட்டது.
மாவட்ட கழக நிர்வாகிகள் கிளைகள் வாரியாக சுற்றுப்பயணம் செய்து கிளை கழகங்களை புதுபிப்ப தென தீர்மானிக்கப்பட்டது.
விடுதலை சந்தா சேர்க்கையை விரை வுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் தெ ருமுனை கூட்டங்கள் நடத்தி கழக கொடிகளை ஏற்றிடவும்; புதிய கிளை கழகங்களை ஏற்படுத்துவும் முடிவு செ ய்யப்பட்டது.
பெரியாரில் கருத்தரங்கம் ஒன்றிய வாரியாக நடத்துவது எனவும் தீர் மானிக்கப்பட்டது.

நினைவு நாள்
மரியாதை

மேனாள் மாவட்ட தலைவர் ப.சுப்பராயனின் முதலாவது நினைவு நாளையொட்டி (18.03.2025) அவரின் இல்லத்திற்கு சென்று பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அச்சமயம் மாவட்ட தலைவர் சே.வ.கோபன்னாவிடம் பெரியார் உலக நிதியாக ரூ. 5000 வழங்கி வாழ்விணையர் செல்வி சுப்பராயன் உள்ளிட்ட குடும்பத்தினர் பெரியார் கொள்கை வழியில் பயணிப்பதை வெளிப்படுத்தினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *