நொறுக்குத் தீனிக்கு அய்ந்து சதவீத ஜி.எஸ்.டி. வரியாம்

1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை 9 – திரையரங்குகளில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 5 சத வீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக் கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் வருகிற 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திரை யரங்குகளில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின் றன. தற்போது சில திரை யரங்குகளில் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங் களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒரே மாதிரியாக 5 சத வீதம் வரி விதிக்க வேண் டுமென ஒன்றிய, மாநில வரித்துறை அதிகாரிகள் அடங்கிய பிட்மென்ட் கமிட்டி, கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன் பேரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் இது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கவுள்ளது.

அதேபோல் தனிப் பட்ட பயன்பாட்டிற்காக அரிதான நோய்களுக் கான சிகிச்சையில் பயன் படுத்தப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான உணவு இறக்குமதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித் தும் கவுன்சில் முடிவு செய்யும் என கூறப்படு கிறது. தற்போது அத்த கைய மருந்து மற்றும் உணவு இறக்குமதிக்கு 5 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *