நெய்வேலி, மார்ச் 19 வடக்குத்து கழகத்தின் சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் 15.3.2025 அன்றிரவு 7 மணி முதல் 10 மணி வரை பரபரப்பான சுழலும் சொற்போர் மாவட்ட கழகத் தலைவர் தண்டபாணி தலைமையில், கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், மாவட்ட துணை தலைவர் பஞ்சமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் மணிவேல் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஆட்சிக்கு சிறப்பு சேர்ப்பது கல்வித்துறை சாதனைகளா! மருத்துவத்துறை சாதனைகளா! சமூகநீதி சாதனைகளா! என்னும் தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நடுவராக இருந்த சுழலும் சொற்போரை நடத்தினார்.
கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், ‘மருத்து வத்துறை சாதனைகளே’ எனும் தலைப்பிலும், நெய்வேலி அருணாசலம், ‘கல்வித்துறை சாதனைகளே’ எனும் தலைப்பிலும், கடலூர் எழில் ஏந்தி, ‘சமூக நீதி சாதனைகளே’ எனும் தலைப்பிலும், சொற்போர் நிகழ்த்தினர்.
சமூகநீதி சாதனைகளை பொறுத்ததே!
மொத்தத்தில் திமுக அரசின் சாதனைகள் மக்களிடையே கொண்டு போய் சேர்க்கப்பட்டன.‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் அனைத்துத் துறைகளிலும் நிகழ்த்தப்பட்டாலும் ‘‘அகில இந்திய அளவில் திராவிட மாடல் ஆட்சியின் மாண்பை தமிழ்நாடு அரசின் முதல மைச்சரின் ஆளுமையை கொண்டு போய் சேர்ப்பது சமூகநீதி சாதனைகளை பொறுத்ததே’’ என்று நடுவர் தீர்ப்புரைத்தார்.
நிகழ்வில் கழக மகளிரணி தோழர்கள் பெரியார் பிஞ்சு சாருவகி, அரிதா, புவனேஸ்வரி, தேவி, கலைச்செல்வி, திராவிட மணி விஜயா, சுமலதா, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வெங்கடேசன், வடலூர் கழக தலைவர் புலவர் ராவணன், பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் மாணிக்கவேல், வடலூர் தீனமோகன், கோ.இந்திரஜித், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம், எனதிரிமங்கலம் ராஜேந்திரன், வி.திராவிடன், சுப்பிரமணியன், ரமேஷ், நெய்வேலி அசோக், நெய்வேலி நகரம் மாணிக்கவேல், திமுக செல்வராஜ், கிளைக் கழகத் தலைவர் தங்க பாஸ்கர், ஏ.பி.குப்பம் பாண்டியன், நூலகர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் நன்றி கூறினார்.