சிதம்பரம் மாவட்டம் – பி.முட்லூர் – காட்டுமன்னார்குடியில் கழக பிரச்சாரப் பொதுக்கூட்டம்

Viduthalai
1 Min Read

பி.முட்லூர், ஜூலை 9 – ஈரோடு தீர்மான விளக்கப் பொதுக் கூட் டம், பரங்கிப்பேட்டை ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், 30.6.2023 அன்று பி.முட்லூரில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் துரை.செயபால் வரவேற்புரையாற் றினார்.

மாவட்ட அமைப்பாளர் கு.தென் னவன் தலைமையேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரி யார்தாசன், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழக சொற்பொழிவாளரும், மாவட்ட இணைச் செயலாளருமான யாழ்.திலீபன், வைக்கம் போராட்ட வர லாறு, சுயமரியாதை இயக்க சாதனைகள் – சேரன்மாதேவி குரு குலத்தில் நடைபெற்ற தீண்டாமை செயல்கள் மற்றும் கலைஞரின் தமிழின உணர்வு குறித்து உரை யாற்றினார்.

காட்டுமன்னார்குடி

காட்டுமன்னார்குடி ஒன்றிய கழகத்தின் சார்பில், 1.7.2023 ஞாயிறு மாலை 6:00 மணிக்கு, காட்டு மன்னார்குடி சகஜானந்தா சிலை அருகில்  ஈரோடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய கழக அமைப்பாளர் சண்முகசுந்தரம் வரவேற்புரையாற் றினார். நகர கழக தலைவர் பொன்.பஞ்சநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகர வி.சி.க. தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் ப.முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பஞ்சநாதன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், பெரியார் இயக் கப் பற்றாளரும், சீரிய பகுத்தறிவுவாதி யுமான த.பழனிசாமி ஆகியோர் பேசி னார். மாவட்ட இணைச் செயலாள ரும், கழகச் சொற்பொழிவாளருமான யாழ்.திலீபன், வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுல கொடுமை கள், சுயமரியாதை இயக்க சாதனை கள், கலைஞரின் சுயமரியாதை உணர்வு குறித்து விளக்கமாகப் பேசினார். இறுதியில், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *