கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

9.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

👉ஆளுநர் அலுவலகத்தில் கோப்புகள் வந்தனவா என்று கூட தெரியாமல் ஆர்.என்.ரவி இருக்கிறாரா? என திமுக கேள்வி.

👉தேசியவாத காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க மகாராட்டிரா முழுவதும் பயணம் மேற்கொள்ள சரத் பவார் முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

👉கங்கை நீரால் கழுவப்பட்டு  மகாராட்டிராவில் ஊழல்வாதிகள் அமைச்சர்களாகிவிட்டனரா? என மோடியை சட்டீஸ்கர் முதலமைச்சர் பாகேல் கடுமையாக சாடியுள்ளார்.

👉பொது சிவில் சட்டத்திற்கு நிகரான கோவா குடும்ப சட்டம், கோவாவில் பெண்களுக்கு அநீதியை ஏற்படுத்தி யுள்ளது என்கிறார் வழக்குரைஞர் ஆல்பட்டினா அல்மீதா.

தி இந்து

👉மோடி அரசு கொண்டு வரும் தகவல் பாதுகாப்பு சட்டம், அரசாங்கத்திற்கும் அதன் அமைப்புகளுக்கும் விலக்கு அளிப்பது “பெரும் கவலையை” ஏற்படுத்துகிறது என்று நீதிபதி சிறீகிருஷ்ணா பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

👉 இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு அந்நாட்டு பிரதமர் சுனக்கைக் கேள்வி எழுப்புவது போல், இந்தியா ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று கூறும் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு சாத்தியமற்றது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடல்.

👉 ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என்கிறது சீக்கிய அமைப்பான எஸ்.பி.ஜி.சி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் உட்பட எம்.பி.பி.எஸ். முழு படிப்பையும் படித்தவர்கள் மட்டுமே மாநில ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற பிஜி-நீட் தேர்வில் கூறப்பட்டுள்ள விதிக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் பிறந்து வெளி மாநிலத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்களும் விண்ணப் பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள தேர்வுக் குழு சில விளக்கங்கள் அளித்துள்ளது. 

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *