அய்.நா. அவையில் 145 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்!
இந்தியாவும் ஆதரவு
நியூயார்க், நவ.14 – இசுரேல் குறித்த வெளியுறவுக் கொள்கையில் மோடியின் பா.ஜ.க. அரசு பெரிதும் குழப்பமான நிலையில் இருந்து வரு கிறது. சரத்பவார் போன்ற தலை வர்கள் பிரதமருக்கு ஒரு கொள்கை, வெளியுறவு செயலகத்துக்கு ஒரு கொள்கையா என்று இடித்துரைத்த நிலையே இருந்தது. போருக்கு எதிரான வாக்கெடுப்பின்போது இந்தியா வாக்களிக்காமல் இருந்தது. தற்போது அதன் நிலைப்பாட்டிலி ருந்து மாற்றம் காணப்பட்டுள்ளது. அதன்படி, ஆக்கிரமிப்பு பாலஸ்தீ னத்தில், இஸ்ரேலின் குடியேற்ற நட வடிக்கைகளைக் கண்டிக்கும் தீர் மானத்தை ஆதரித்து அய்.நா.வில் இந்தியா வாக்களித்தது.
இதன்மூலம், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே யுத்தம் தொடங்கிய பிறகு, இந்தியா முதன்முறையாக இஸ்ரே லுக்கு எதிரான நிலைப்பாட்டை அய்.நா. மன்றத்தில் எடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையான, பாலஸ்தீன ஆதரவு நிலைபாட்டிற்குத் திரும்பியுள்ளது எனலாம்.
அக்.28 தீர்மானத்தைப் புறக்கணித்த இந்தியா
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில், இஸ்ரேல் கடந்த அக்டோபர் 7 துவங்கி குண்டுமழை பொழிந்து, அப்பாவிகளை கொன்று குவித்து வரும் நிலையில், முதன்முறை யாக இஸ்ரேலுக்கு எதிராக கடந்த அக்டோபர் 28 அன்று ஜோர்டான் நாடு அய்க்கிய நாடுகளின் அவை யில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், இந்த தீர்மானத்தை ஆத ரிக்காமல், இந்தியா புறக்கணித் திருந் தது. “மனிதாபிமான அடிப்படை யில் போர் நிறுத்தத்தை உடன டியாக அமல்படுத்த வேண்டும்; காசா பகுதிக்குள் அத்தியாவசியப் பொருட்கள் சேவைகள் தடை யின்றி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்; பாதுகாப்பு மற்றும் சிகிச்சை கோரும், சிறைப்பிடி க்கப்பட்ட அனைத்து மக்களையும், உடனடியாக நிபந் தனையின்றி விடுவிக்க வேண்டும்” என்றே ஜோர்டான் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இஸ்ரேலின் பெயரைக் கூட குறிப்பிடாமல்தான், அரபு நாடு கள் கூட்டமைப்பு சார்பில் ஜோர்டான் இந்த தீர்மானத்தை வடிவமைத்து இருந்தது. அப்படி யிருந்தும், இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானத்தைப் புறக்கணித்த இந்தியா, அதேநேரம், பாலஸ்தீன த்தின், ஹமாஸ் இயக்கத்தைக் கண்டிக்கும் வகையில் கனடா கொண்டுவந்த திருத்தத்தை மட்டும் ஆதரித்து வாக்களித்தது. ஆனால், ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானம் மொத்தமுள்ள 193 நாடுகளில் 120 நாடுகளின் ஆதரவுடன் நிறை வேற்றியது. இந்தியா ஆதரித்த கனடா தீர்மானம் தோற்றுப்போனது.
70 ஆண்டு நிலைப்பாட்டை கைவிட்ட பா.ஜ.க. அரசு
இந்தியாவின் இந்த இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு, இவ்வளவு காலமும் இந்தியா கடைப்பிடித்த வெளியுறவுக் கொள்கைக்கு எதி ரானது என கண்டனங்கள் எழுந்தன. பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீ கரிக்கப்படுவதற்கு முன்பே பாலஸ் தீன தூதரை அங்கீகரித்த நாடு இந்தியா. பிரெஞ்சுக்காரர்களுக்கு பிரான்சு, ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து என்பதுபோல் பாலஸ் தீனம் பாலஸ்தீனர்களுக்கு சொந்த மானது என்று காந்தியார் கூறினார். அப்போது முதல் 70 ஆண்டு களுக்கும் மேலாக அய்.நா. மன்றங்களில் இஸ்ரேலுக்கு எதிராக வும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வுமே இந்தியா இதுவரை வாக்களித்து வந்தது. ஆனால், 2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இஸ்ரேலுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தது. 2017-இல் இஸ்ரேல் சென்றதன் மூலம் அந்நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற அவப் பெயரை மோடி பெற்றார். எனினும், அய்.நா. மன்றத்தில் இஸ்ரேலை ஆத ரிக்கும் நிலையை எடுக்க வில்லை. ஆனால், கடந்த அக்டோ பர் 7 அன்று துவங்கிய யுத்த பின்ன ணியில், பாலஸ்தீனத்தை பாதுகாக் கும் தீர்மானத்தை ஆதரிக்காமல் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மோடி அரசு எடுத்தது.
காங்கிரஸ், இடதுசாரிகள் மோடி அரசுக்கு கண்டனம்
இதற்கு இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் துவங்கி அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் கண்டனத்தைத் தெரி வித்தன. இஸ்ரேலை ஆதரித்து, பன்னாட்டு அரசியலில் இந்தியாவின் மதிப்பை மோடி அரசு குறைத்து விட்டது என்று கண்டனம் தெரி வித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் நாடு முழுவதும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளையும், இயக்கங்களையும் நடத்தின. இதனால் நெருக்கடிக்கு உள்ளான பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுப் பேசினார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்கு தலை கண்டித்திருந்தாலும், ‘இரு நாடுகள்’ (பாலஸ்தீனம் – இஸ்ரேல்) கொள்கையில் உறுதியுடன் இருப்ப தாக தெரிவித்திருந்தார். நிவாரண உதவிகளையும் அனுப்பி வைப்ப தாக கூறி சமாளித்தார்.
ஆதரித்து வாக்களித்த இந்தியா!
இந்நிலையில்தான், “கிழக்கு ஜெருசலேம், சிரியாவின் கோலான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ் தீன பகுதிகளில் இஸ்ரேலிய குடி யேற்றங்கள்” என்ற தலைப்பில் அய்க்கிய நாடுகளின் பொது அவை யில் நவம்பர் 9 அன்று வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. “கிழக்கு ஜெருசலேம், சிரியாவின் கோலான் உட்பட ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன பகுதிகளில் நிலத்தை அபகரிப்பது, இஸ்ரேலி யர்களை குடியேற்றுவது, மக்களின் பாதுகாப்பான வாழ்நிலை யை சீர் குலைப்பது, நிலத்தின் குடி மக்களை கட்டாயமான முறையில் வெளியேற் றுவது மற்றும் அவர்களது நிலத்தை தமது பகுதியுடன் இணைப்பது ஆகிய இஸ்ரேலின் நடவடிக்கை களை கண்டிக்கி றோம். மேலும் சட்டத்திற்கு புறம்பான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு (குடியேற்றம்), உலகின் அமைதி, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு தடையாக இருப்ப தால், அனைத்து ஆக்கிரமிப்பு குடி யேற்ற நடவடிக்கைகளையும் இஸ் ரேலின் உடனடியாக மற்றும் முழு மையாக நிறுத்த வேண்டும்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
145 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்!
இந்த தீர்மானத்தை சீனா, பிரான்சு, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் ஆதரித்து (இஸ்ரேலுக்கு எதிராக) வாக்களித்துள்ளது. இத னால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பி ற்கு எதிரான இந்த தீர்மானம் 145 நாடுகளின் ஆதரவுடன் அய்.நா.வில் நிறைவேறியுள்ளது. வழக்கம் போல, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 7 நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக- தீர்மானத்தை எதிர்த்து வாக்களித் துள்ளன. 18 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்துள்ளன.