போடிநாயக்கனூர், மார்ச் 18- தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 16 3 2025இல் தொண்டரத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்த நாள் விழா, மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டுபிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிறப்புரையாக ஆரூர் நர்மதாவும், பெரியகுளம் புலவர் நாகநந்தினியும் உரையாற்றினார்கள். மேடையில்முற்றிலும் மகளிர் மட்டும் கலந்து கொள்ளும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி தலைமையில் போடி நகர்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி, சங்கர், துணைத் தலைவி கிருக்ஷ்ணவேனி பச்சையப்பன், பெரியகுளம் வாசுகி, அறிவுக்கரசன், சுருளிப்பட்டி சுமிலா சிவா, பேபி கவின்மதி, கருப்பசாமி, ஜனநாயக மாதர் சங்கமாவட்ட தலைவி மீனா, சரஸ்வதி சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் புருஷோத்தமன், மேனாள் நகர்மன்ற துணைத்தலைவர் சங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கழகத் தோழர்கள் கே.கே.பட்டி முத்தமிழன், முருகன், சிவா, டொம்புச்சேரி சென்றாயன், போடி நகரத் தலைவர் பெரியார் லெனின், செயலாளர் முருகானந்தம், சரவணன், திராவிடன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இறுதியில் நாகஜோதி லெனின் நன்றி கூற கூட்டம் முடிந்தது.
போடிநாயக்கனூரில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

Leave a Comment