போடிநாயக்கனூரில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

1 Min Read

போடிநாயக்கனூர், மார்ச் 18- தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 16 3 2025இல் தொண்டரத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்த நாள் விழா, மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டுபிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிறப்புரையாக ஆரூர் நர்மதாவும், பெரியகுளம் புலவர் நாகநந்தினியும் உரையாற்றினார்கள். மேடையில்முற்றிலும் மகளிர் மட்டும் கலந்து கொள்ளும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி தலைமையில் போடி நகர்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி, சங்கர், துணைத் தலைவி கிருக்ஷ்ணவேனி பச்சையப்பன், பெரியகுளம் வாசுகி, அறிவுக்கரசன், சுருளிப்பட்டி சுமிலா சிவா, பேபி கவின்மதி, கருப்பசாமி, ஜனநாயக மாதர் சங்கமாவட்ட தலைவி மீனா, சரஸ்வதி சரவணன் கலந்து கொண்டு உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் புருஷோத்தமன், மேனாள் நகர்மன்ற துணைத்தலைவர் சங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கழகத் தோழர்கள் கே.கே.பட்டி முத்தமிழன், முருகன், சிவா, டொம்புச்சேரி சென்றாயன், போடி நகரத் தலைவர் பெரியார் லெனின், செயலாளர் முருகானந்தம், சரவணன், திராவிடன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இறுதியில் நாகஜோதி லெனின் நன்றி கூற கூட்டம் முடிந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *