திருச்சி, மார்ச் 18 ஒன்றிய அரசின் மொழிக் கொள்கையில் தமிழ்நாட் டிலும்கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்று திமுக எம்.பி. அருண் நேரு தெரி வித்துள்ளார்.
தமிழுக்கு இடமில்லை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இட மில்லை என்பது PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (முன்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) மூலம் மீண்டும் தெளிவாகிறது. திருச்சி ராப்பள்ளியில் உள்ள பி.எம். சிறீ கேந்திரிய வித் யாலயா எண் 2, 2025-26 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர் பணி யிடங்களுக்காக நேர்காணல் அறிவிப்பை 16-03-2025 அன்று வெளியிட்டுள்ளது. இதில்: PGT (பட்டதாரி ஆசிரியர்): பொருளாதாரம், ஆங்கிலம் TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரி யர்): ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவி யல் PRT (முதன்மை ஆசிரியர்): பொது மற்றும் இசைபோன்ற பாடங் களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால், தமிழ் மொழிக்கு எந்த பணி யிடமும் குறிப்பிடப்பட வில்லை. இது தமிழ் நாட்டின் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்க விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், RTI தகவல்களின்படி, தமிழ் ஆசிரியர்கள் இல்லை, ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த பள்ளிகள் தற்போது பி.எம். சிறீ என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு, தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் அதன் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், இந்த பள்ளிகள் இன்னும் இருமொழி கொள்கையை (ஹிந்தி மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றுகின்றன, தமிழ்நாட்டின் மொழியான தமிழை கூட அவர்கள் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால் இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படு கிறது.
சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்கள் NEP 2020 வலியுறுத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றி செயல்படும் பி.எம். சிறீ பள்ளிகளுக்கான புரிந் துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத் திடவில்லை என்ற காரணத்தால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSA) மூலம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 2000 கோடி அளவிலான நிதியை நிறுத்தி வைத்து, சர்ச் சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இது தமிழ்நாட்டின் மொழியியல் அடையாளத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் புறக்கணிப்பதாகும். தமிழ் நாடு இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்று கிறது, மற்றும் ஹிந்தியை திணிக்கும் முயற்சியாக புதிய கல்வித் திட்டத்தை 2020-அய் எதிர்க்கிறது.
தமிழ் மொழியை
மதிக்க வேண்டும்
ஆனால் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் ஒன்றிய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பண்பாட்டையும் மொழி யையும் மதிக்க வேண்டும். பி.எம். சிறீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண் டும், மேலும் எஸ்.எஸ்.ஏ (SSA) நிதிகளை தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டும்,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.