திராவிட அரசுகளின் ஆதி விதை ‘பனகல் அரசர்’ வழி ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் டுவிட்டர் செய்தி

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 10 – பனகல் அரசர் வழிநடந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவோம் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பனகல் அரசரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலை தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசரின் பிறந்தநாள் (9.7.2023). 

அதிகாரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அர சாணை, மருத்துவம் படிக்க சமஸ் கிருதம் தேவையில்லை, பெண் களுக்கு வாக்குரிமை, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற எண்ணற்ற புரட்சிகரத் திட்டங் களால் காட்டியவர் அவர்!

பனகல் அரசர் பற்றிய துணைப் பாடக் கட்டுரைதான் பள்ளி மாணவராக இருந்த கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாக விளங் கியது. “தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்” எனத் தந்தை பெரியார் போற்றிய பனகல் அரசர் வழி நடப்போம்! தமிழ் நாட்டை முன்னேற்றுவோம்!” இவ் வாறு அதில் கூறியுள்ளார்.

திராவிட அரசுகளின் ஆதிவிதை யாக விளங்கும் பனகல் அரசர் அவர் களின் பிறந்தநாளில் (9.7.2023)! அதிகா ரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மை களைச் செய்ய முடியும் என்பதற்கு வகுப்புவாரி  பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை, மருத்துவம் படிக்க சமஸ் கிருதம் தேவையில்லை  என்ற பனகல் அரசரின் ஆணைகள்  நமக்கு வழி காட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *