17.3.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* அமெரிக்க உளவுத்துறை அதிகாரி துஷார் கப்பார்ட் (வலதுசாரி சிந்தனையாளர்) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாநாடு டில்லியில் நடை பெறுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘‘ரூ’’ வை பெரிதாக வைத்திருந்தோம்: முதலமைச்சர் விளக்கம்
தி இந்து:
* தொகுதி மறுசீரமைப்பு, வாக்காளர் அடையாள எண் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தல்.
தி டெலிகிராப்:
* கூட்டுறவு கூட்டாட்சி: தொகுதி மறுசீரமைப்பு திட்டங்களில் தென்னிந்தியாவிற்கு ‘அநீதி’ இழைக்கப்படுகிறது என மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை. ‘அய்அய்டி, அய்அய்எம் மற்றும் மத்திய பல்கலைக்கழக பதவிகளில் பாதி காலியாக உள்ளன; மாணவர்கள் எப்படி முன்னேறுவார்கள்?’ என்றும் கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உத்தரகாண்ட் பாஜக நிதி அமைச்சர் பதவி விலகல். மலை ஜாதியினரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதால் சர்ச்சை.
.- குடந்தை கருணா