எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்பு

1 Min Read

விருதுநகர், ஜூலை 10 –   பெங்களூருவில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் பிரதமர் மோடி குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பெங்களூருவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்கும்.

பொது சிவில் சட்டம்:

பொது சிவில் சட்டத்துக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பொது சிவில் சட்டத்தைப் புரிந்து கொண்டு பலரும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர். பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் கட்சிகள் மட்டும் எதிர்க்கவில்லை, பழங்குடியின மக்களும் எதிர்க் கின்றனர். முஸ்லிம்களை நேரடியாகப் பாதிக்கும் விதமாக பொது சிவில் சட்டம் வருமானால் அதை முழுமையாக எதிர்ப்போம் என்று இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *