சட்டமன்றத்தில் என்னை புகழ்ந்து பேச வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

1 Min Read

சென்னை, மார்ச் 16- நிதிநிலை கூட்டத்தொடரையொட்டி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 14.3.2025 அன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி ‘பட்ஜெட்’ கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தேவை இல்லாமல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் என்னை புகழ்ந்து பேசக்கூடாது.

சபை நேரத்தை ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கும், தொகுதி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும். நம் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் அதற்கு ஆதாரப்பூர்வமாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொகுதியில் முறையாக நிறைவேறுகிறதா? என்பதை ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
இதில் குறைகள் ஏதேனும் இருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *