இராமேசுவரம், மார்ச் 16- 13.3.2025அன்று காலை 11 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் உதயா தங்கும் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமையேற்று மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் கே.எம்.சிகாமணி 52 ஆண்டுகளாக இயக்கத்தில் செயல்பட்டு வருகிறேன் எத்தனையோ தடைகள், எதிர்ப்புகளை கடந்து செயல்பட்டு வருகிறோம்அதற்கு காரணம்தந்தைபெரியார்கொடுத்த தன்னம்பிக்கைதான் 92-அகவையில் ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி களப்பணியாற்றுவோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அனைவரையும் வரவேற்ற மாவட்ட செயலாளர் எம்.முருகேசன் ஒவ்வொரு தோழர்களும் முன்னெடுக்க வேண்டிய களப் பணியை எடுத்துரைத்தார்.
பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் விடுதலை ஏட்டின் சிறப்பினையும், மாணவர்கள், இளைஞர்கள் இயக்கத்தில் இணைத்திடும் பணியில் ஈடுபடவேண்டிய அவசியத்தையும் தெரிவித்தார்கள்.
பெரியார் பெருந்தொண்டர் அண்ணாரவி-நாகவள்ளி இணையர் விடுதலை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தா வழங் கினர். புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இராமேசுவரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழாவை-சுழலும் சொற்போர் நிகழ்ச்சியாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.