அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா! இராமநாதபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

1 Min Read

இராமேசுவரம், மார்ச் 16- 13.3.2025அன்று காலை 11 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் உதயா தங்கும் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமையேற்று மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் கே.எம்.சிகாமணி 52 ஆண்டுகளாக இயக்கத்தில் செயல்பட்டு வருகிறேன் எத்தனையோ தடைகள், எதிர்ப்புகளை கடந்து செயல்பட்டு வருகிறோம்அதற்கு காரணம்தந்தைபெரியார்கொடுத்த தன்னம்பிக்கைதான் 92-அகவையில் ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி களப்பணியாற்றுவோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அனைவரையும் வரவேற்ற மாவட்ட செயலாளர் எம்.முருகேசன் ஒவ்வொரு தோழர்களும் முன்னெடுக்க வேண்டிய களப் பணியை எடுத்துரைத்தார்.

பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் விடுதலை ஏட்டின் சிறப்பினையும், மாணவர்கள், இளைஞர்கள் இயக்கத்தில் இணைத்திடும் பணியில் ஈடுபடவேண்டிய அவசியத்தையும் தெரிவித்தார்கள்.
பெரியார் பெருந்தொண்டர் அண்ணாரவி-நாகவள்ளி இணையர் விடுதலை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கு சந்தா வழங் கினர். புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இராமேசுவரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழாவை-சுழலும் சொற்போர் நிகழ்ச்சியாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *