அன்னையார் தலைமையில் நாம் எடுத்த உறுதிமொழி!

Viduthalai
1 Min Read

தோழர்களே, தோழர்களே,
தந்தை பெரியார் மறைந்த நிலையில் திருச்சியில் அன்னை மணியம்மையார் தலைமையில் கூடிய நமது திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நாம் எடுத்த தீர்மானம் என்ன?
“திராவிடர் கழகத்தவராகிய நாங்கள், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம்!” (6.1.1974)
இதன்படி அன்னையார் தலைமையிலும், அவர்களின் மறைவிற்குப் பிறகும் தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றியிருக்கிறோம்; ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் மலரும் வரை நம் பணிகள் தொடரும்! தொடரும்!!
அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயார் தயார் என்று அன்னையார் நினைவு நாளாகிய இன்று உறுதி எடுத்து உழைப்போம்! உழைப்போம்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அன்னையார்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

16.3.2025 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *