திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் மூலம் தீயணைப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி 14.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் விதம் மற்றும் அலுவலகங்களிலோ, பொது இடங்களிலோ தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து திருச்சி மண்டல தீயணைப்புத் துறை முதுநிலை அலுவலர் பிரான்சிஸ் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறை அலுவலர் மணிகண்டன் தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்து, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தீயணைப்பு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books