தண்டலம், மார்ச் 15– 12-03-2025 அன்று மாலை ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் இலுப்பைதண்டலம் கிராமத்தில் ஓய்வு பெற்ற பிஎஸஎன்எல் சின்னதுரையின்வாழ்விணையர் ராமு அம்மா மறைவை ஒட்டி நினை வேந்தல் படத்திறப்பு, அன்னை மணியம்மையார் அவர்களின் 106ஆவது பிறந்தநாள், திராவிடர் கழக கொடி ஏற்றம், கிளைக் கழகம் தொடக்கம் ஒருங்கினைத்து மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8.45 க்கு முடிவுற்றது.
சு.லோகநாதன் தலைமையில் சிங்கப்பூர் சங்கர் வரவேற்க .ஜீவன்தாஸ், சு.சங்கர், க.சு.பெரியார் நேசன், கோ.கிருஷ்ணமூர்த்தி, ந.அறிவுச்செல்வன், ந.இராமு, போ.பாண்டுரங்கன், கல்லாறு அன்பு, ஏ.ஞானப்பிரகாசம்,ஆகியோர் முன்னிலை ஏற்க கழக கொடியை கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஏற்றிவைக்க, ராமு அம்மா அவர்களின் படத்தை திருவள்ளுர் மாவட்ட தலைவர் மா.மணி திறந்து வைத்தார்.,அன்னை மணியம்மையார் படத்தை ஆர்.சின்னதுரை திறந்து வைக்க, ம.தி.மு.க. கெ.ஆறுமுகம், ரவிபாரதி, காஞ்சி மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, மாநில மகளிரணி தகடூர் தமிழ்ச்செல்வி, பெரியார் பெருந்தொண்டர் பொதட்டூர் புவியரசன், ஆகியோரின் உரைக்கு பிறகு கழக பேச்சாளர் ஆரூர்.தேவ.நர்மதா நினைவேந்தல் சொற் பொழிவாற்றினார். இறுதியாக சின்னதுரை நன்றிகூறி நிகழ்ச்சி யை முடித்து வைத்தார். நிகழ்வில் காஞ்சி மாவட்ட செயலாளர் கி.இளையவேல்,காஞ்சி மாவட்ட ப.க.செயலாளர் இளம்பரிதி,காஞ்சி தோழர் அருண்குமார்,ஆகியோர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியை தலைமைசெயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன் ஒருங்கிணைத்தார்.