தொகுதி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சருக்கு அழைப்பு

1 Min Read

திருவனந்தபுரம், மார்ச் 15–– நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு திமுக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து அமைச்சர் பி.டி.தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை வழங்கினர். மேலும், கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

அழைப்பு

இதனையடுத்து, இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பி.டி.ஆர்.தியாகராஜன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்பாக, நானும், தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனும் திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தோம்.

கூட்டு நடவடிக்கைக் குழு

நியாயமற்ற முறையிலான தொகுதி மறுவரையறை திட்டத்தை கூட்டாக எதிர்க்கும் நோக்கில் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பை நாங்கள் வழங்கினோம்.

இந்த தொகுதி மறுவரையறை என்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமைக்கும் எதிரான மறுக்க முடியாத தாக்குதலாகும். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டுக்கான தனது வலுவான ஆதரவை கேரள முதலமைச்சர் வெளிப்படுத்தினார்.
மேலும், ஜனநாயக விழுமியங் களை நிலைநிறுத்தவும் நமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கூட்டுப் போராட்டத் திற்கான தனது முழுமையான ஆதரவை உறுதி செய்தார்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று (14.03.2025), திருவனந்தபுரத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கக் கோரி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சார்பில், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜனும், நானும் சந்தித்து, அழைப்பு விடுத்தோம். இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் மாஸ்டர் கோவிந்தனையும் சந்தித்து அழைப்பு விடுத்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *