பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்களின் சிறப்புக் கூட்டம்

Viduthalai
2 Min Read

அரசியல்

திருச்சி, ஜூலை 10 – பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி 30.06.2023 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச் சியில் பேராசிரியர் ச. இராஜேஷ் வரவேற்புரையாற்றினார். 

பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பணித்தோழர்கள் கூட்டமைப்பின் தலைவர் முனை வர் கோ.கிருஷ்ணமூர்த்தி, பெரியார் துவக்கப்பள்ளியின் தலைமை யாசிரியர் விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் துவாக்குடி அர சினர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் ப. வளர்மதி   “தந்தை பெரியாரும் பெண்ணுரிமையும்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். 

அவர் தமது உரையில் பெண் புத்தி பின் புத்தி, தையல் சொல் கேளாதீர், பேதமையே பெண் ணுக்கு அணி கலன் என்று பெண் ணடிமைத் தனங்கள் ஓங்கி நின்ற காலத்தில் பெண்ணுக்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்  என்றும்  தடம் பதித்த இவ்வளாகத்தில் தான் நின்று உரையாற்றுவதில் பெருமதிப்பும் மகிழ்ச்சியும் அடைவதாகவும் உரையாற்றினார். 

மேலும் ஆண்களிடமிருந்து பெண்களுக்கு உரிமைகள் கிடைத்து விடாது, அதனை பெற பெண்களே களம் காண வேண்டும் என்று கூறிய தந்தை பெரியார் பெண்ணுரிமை போர்க்களத்தில் ஓர் ஆணாக தாமே முன்னின்று நடத்தி அதில் வெற்றியும் கண்டார். சாதி, மதங்கள் பெண்களை அடக்கிவைத்திருந்த மாண்பினை யும் குழந்தை திருமண ஒழிப்பு, கைம்பெண் மறுமணம், ஆண் பெண் சமத்துவம், பெண்களுக்கான கல்வி மற்றும் பிற உரிமைகள் குறித்தும் உரையாற்றினார்.

பெண்கள் குழந்தைகள் பெறும் இயந்திரங்கள் அல்ல என்றும் பெண்களின் நலவாழ்விற்காக கருத்தடை  முறைகளை அன்றே சிந்தித்தவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்றும் உரையாற்றி னார். பெண்கள் அலங்காரப்பது மைகளாக திகழக்கூடாது, தமது வசதிக்கு ஏற்றாற்போல் ஆண் களைப்போல உடை உடுத்திக் கொள்வதை பெரியார் ஆதரித்தார் என்றும் குடும்ப சூழ்நிலைகள் முதல் சமுதாய சூழ்நிலைகள் வரை பெண்ணிய கொடுமைகளை பெரி தும் எதிர்த்தவர் தந்தை பெரியார் என்றும் எடுத்துரைத்தார். 

வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முற்கால கருத்தை மாற்றிக் காட்டி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தெற்கு வள ரக்கூடிய சூழ்நிலையை உருவாக்க அடித்தள விட்டவர் தந்தை பெரியார் என்று பெண்ணியச் சிந்தனைகளை தாய்த்தமிழால் திராவிட உணர்வால் எடுத்து ரைத்து  பெரியார் மருந்தியல் கல்லூரி பணித்தோழர் களுக்கு விருதுகளை வழங்கி சிறப் பித்தார். 

நிறைவாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் எஸ். பிரியதர்ஷினி நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 

பெரியார் நூற்றாண்டு அனைத்து கல்வி நிறுவனங்களின் பணித் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச் சியில் ஜூன் மாதத்தில் பிறந்த பணித் தோழர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந் தனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய ஆசிரியர் வாழ்நாள் சாதனையா ளர் விருது பெற்றமைக்கும் 90 வய தில் 80 ஆண்டுகள் வெற்றிகரமாக பொதுவாழ்வுப்பணியை நிறைவு செய்தமைக்கும் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் சார்பில் அனை வருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பெருக்குடன் கூட்ட மைப்பு நிகழ்ச்சி நிறைவுபெற்றது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *