திருச்சி, மார்ச் 14- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு மாண வர்கள் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் தேர்விற்குப் பிறகு பட்டயப்படிப்பு விதிமுறைகளின்படி, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் 500 மணிநேரம் செயல்முறை பயிற்சி யினை மேற்கொண்டனர்.
இதில் பொதுமக்களுக்கு மருந்துகளை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்று பொறுமையாகவும் புரியும்படியும் தெரிவித்தல், அவசர காலங்களில் துரிதமாக செயல்படுவது, மருந்துகள் குறித்த தரவுகளை சரியாக பராமரிப்பது, அர்ப்பணிப்புணர்வுடன் கால நேரம் பார்க்காமல் பணியாற்றுவது, சகிப்புத்தன்மை போன்ற அள வீடுகளின் அடிப்படையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்து வக்கல்லூரியின் முதன்மையர் மருத்துவர் எஸ். குமரவேல் 12.03.2025 அன்று பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டயப்படிப்பு மாணவிகள் சி.ஆர்த்தி, செ. ஆர்த்தி மற்றும் ரெ.கீதப்பிரியா ஆகியோருக்கு சிறந்த பயிற்சி மருந்தாளுநருக்கான விருதினையும் பாராட்டுச் சான்றி தழினையும் வழங்கி சிறப்பித்தார்.
இத்தகைய 500 மணிநேரம் செயல்முறை பயிற்சியினை திருச்சி மாவட்டத்தை இருப் பிடமாகக் கொண்ட பல்வேறு மருந்தியல் கல்லூரியைச் சார்ந்த 117 மருந்தாளுநர்கள் பங்கு கொண்ட இப்பயிற்சியில் 10 மருந்தாளுநர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அதில் பெரியார் மருந்தியல் கல்லூரியிலிருந்து மட்டும் 3 பெண் மருந்தாளுநர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். மற்ற 7 பேரும் ஆண் மருந்தாளுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற மாணவிகளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை, பேராசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.